தினத்தந்தி 30.01.2014
ஓசூரில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை
ஓசூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமு, கமிஷனர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 200 பேருக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் தணிகாசலம், கவுன்சிலர் நாராயணரெட்டி மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.