Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டம்

Print PDF

தினகரன்             01.02.2014

கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டம்

மஞ்சூர், கீழ்குந்தா பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது.நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஜெயாசந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் போஜன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மணிகண்டன் வரவேற்றார். முன்னதாக பேரூராட்சியின் வரவு, செலவினங்கள் மற்றும் பிறப்பு, இறப்பு விகிதங்கள் சரிபார்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெரும்பாலான உறுப்பினர்களும் தங்களது வார்டுகளில் தடையற்ற குடிநீர் வினியோகத்தை மேற்கொள்ளவும், தெருவிளக்குகள், தடுப்புசுவர்கள், நடைபாதை, சாலை வசதிகளை மேம்படுத்தவும் வலியுறுத்தி பேசினர். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கவுன்சிலர் அர்ஜூணன் நன்றி கூறினார்.