Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மின் இணைப்பு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாமல்லபுரம் பேரூராட்சியில் தீர்மானம்

Print PDF

தினமணி             01.02.2014

மின் இணைப்பு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாமல்லபுரம் பேரூராட்சியில் தீர்மானம்

தொல்லியல் துறையின் தடையை நீக்கி மாமல்லபுரத்தில் மின் இணைப்பு வழங்க ஆணை பிறப்பித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து  பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாமல்லபுரம் சிறப்புநிலைப் பேரூராட்சியில் மன்ற கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பேரூராட்சி தலைவர் எம்.கோதண்டபாணி தலைமை வகித்தார். செயல் அலுவலர் என்.எம். முருகன், கவின்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் 2010 தொல்லியில் சட்டவிதிப்படி மாமல்லபுரத்தில் மின் இணைப்பு வழங்க தொல்லியல் துறை தடை விதித்திருந்தது.

இதையடுத்து தொல்பொருள் துறை சட்டத்தில் ஆட்சேபனை இல்லாத விதியினைத் தளர்த்தி ஆய்வு செய்த முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்பட தமிழகம் முழுவதும்  தொல்லியல் துறை கட்டுபாட்டில் உள்ள பகுதிகளில் மின் இணைப்பு வழங்கலாம் என்று ஆணை பிறப்பித்தார். அதையடுத்து தற்போது மாமல்லபுரத்தில் கடந்த 4 ஆண்டகளாக நிறுத்தி வைக்கப்பட்ட மின் இணைப்பு, விண்ணப்பிக்கும் மக்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

மாமல்லபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த முதல்வருக்கு  பாராட்டு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மாமல்லபுரம் மக்களின் நலன் கருதி வரும் கோடைகாலத்தில்  குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் 10 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைப்பது என்றும், 2 சிமென்ட் சாலை விரிவாக்கம் என ரூ.21 லட்சம் இப்பணிகளை செயல்படுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தற்போது கோவளம் சாலையில்  மீன் இறைச்சி, காய்கறி கடைகள், பல்பொருள் அங்காடி கடைகள் கட்டுவதற்கு ரூ.80 லட்சத்தில் பணிகளை மேற்கொள்ள கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.