Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பல்லடம் நகர்மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி             01.02.2014

பல்லடம் நகர்மன்றக் கூட்டம்

பல்லடம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் பி.ஏ.சேகர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, ஆணையாளர் நாராயணன், பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

சின்னசாமி: நகரில் கொசு மருந்து அடிக்காததால் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. ஆழ்குழாய்க் கிணறு அமைத்தும் மின் இணைப்புக் கொடுக்காததால் தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லை.

கிருஷ்ணகுமார்: நகரில், அத்திக்கடவு குடிநீர் குறைவாக வருகிறது. நீதிமன்றம், சார் பதிவாளர் அலுவலகம், காவல் நிலைய பகுதியில் இ-டாய்லெட் அமைக்கப்படவில்லை. பல்லடத்தில் எரிவாயு மயானம் அமைக்க வேண்டும்.

பொன்னுசாமி: குப்பை கொட்ட இடம் இல்லாமல் துப்புரவுப் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.

நாராயணன் (ஆணையாளர்): ஆழ்குழாய்க் கிணற்று தண்ணீர் விநியோகம் செய்ய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொசு மருந்து காலை 6 முதல் 7.30 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 8 மணி வரையும் அடிக்கப்படும். ஒடையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்லடத்தில் எரிவாயு மற்றும் மின் மயானம் அமைக்க குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் முதல் 4 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இடம் கிடைத்தால் எரிவாயு மயானம் அமைக்கலாம்.

மின்வாரிய உதவிப் பொறியாளர் (நகரம்): 15 நாட்களுக்குள் ஆழ்குழாய்க் கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

சேகர் (தலைவர்): பல்லடத்திற்கு வரும் அத்திக்கடவு குடிநீர்க் குழாயில் நீர்க் கசிவால் தண்ணீர் குறைந்துள்ளது. மேலும், இரண்டாவது திட்டத்திற்கு இருகூர் பிரிவு வரை குழாய் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப் பணி 6 மாதத்தில் முடியும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.