தினமணி 01.02.2014
நீடாமங்கலம் பேரூராட்சிக் கூட்டம்
நீடாமங்கலம் முதல் நிலைப் பேரூராட்சிக் கூட்டம் வியாழக்கிழமை தலைவர் பரிமளா செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் சா. செந்தமிழ்ச்செல்வன், செயல் அலுவலர் த. நாராயணமூர்த்தி, மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
2014-2015-ம் ஆண்டிற்கு குத்தகை இனங்கள், கடைகள் ஏலம் விடுவது, புதிய மின் கம்பங்கள் அமைப்பது, தெருமின் விளக்குகள் புதிதாக பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு செலவினங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.