Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுரண்டை பேரூராட்சியில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினகரன்             03.02.2014

சுரண்டை பேரூராட்சியில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம்

சுரண்டை, : சுரண்டை பேரூராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல் பாடு மற்றும் பொது சுகா தாரம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ஜெயராணிவள்ளி முருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பழனி நாடார் முன்னிலை வகித் தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா வரவேற்றார்.

முகாமில் செயல் அலுவலர் பொன்னம்பலம் கலந்து கொண்டு பேசுகை யில், ‘சுரண்டை பேரூராட்சி பகுதியில் பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய  மற்றும் மாநில அரசுகள் மானியத்துடன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தனி நபர் குழுக் கடன், சுழல் நிதி விரைவில் வழங்கப்படும். தனிநபர் கழிப்பிடம் அவசியம். பொது சுகாதாரத்தை பெரியோர், சிறியோர் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார். பின்னர் அவர் பொது சுகாதார விழிப்புணர்வு நோட்டீசை பொது மக்களிடம் வழங்கினார். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கர், வசந்தா, செல்வி, கண்ணன், செல்வன், அருணாசலக்கனி, கல்பனா, சமுத்திரக்கனி, சங்கரா தேவி, இந்திரா, மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பொன்னுத்தாய், ஜீவக்கனி, சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.