தினமலர் 04.02.2014
திருச்சி மாநகராட்சி குறைதீர் கூட்டம்
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் 10 மனுக்கள் பெறப்பட்டது. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெயா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று காலை நடந்தது. மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, துணை மேயர் ஆசிக் மீரா, நகர பொறியாளர் சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 10 மனுக்கள் பெறப்பட்டது. இதில் தெரு விளக்கு சரி செய்தல், கழிப்பிடம் பராமரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழங்கப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, மேயர் உத்தரவிட்டார்.