Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலைப் போட்டிகள் பரிசளிப்பு

Print PDF

தினகரன்                03.02.2014

நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலைப் போட்டிகள் பரிசளிப்பு

புதுக்கோட்டை,: புதுக் கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் மற் றும் போஸ் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி இணைந்து குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி களை நடத்தியது.

இப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கண்ணன், பள்ளி நிர்வாக தலைவி மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  ஓவியப் போட்டிகளில் ஹரிஹரன், அருண்குமார், அனுபாரதி ஆகி யோர் முதல் பரிசையும், சஞ்சய்குமார், துளசிவர்மா, ஆரோன் மோசே ஆகி யோர் 2ம் பரிசுகளையும், சிந்திகா, சந்தோஷ், தீபிகா ஆகியோர் 3ம் பரிசுகளை யும் பெற்றனர். 

பேச்சுப் போட்டிகளில் தனசேகர், துளசிவர்மா, கமலி ஆகி யோர் முதல் பரிசையும்,  சிந்திகா, அஸ்வினி, இஸ்மத்நூன் ஆகியோர் 2ம் பரிசுகளையும், ஜெய்கு மார், ரூபாசக்தி, மனோஜ் குமார் ஆகியோர் 3ம் பரிசுகளை யும்,  கட்டுரைப்போட்டிகளில் பானு பிரபா, ஆசிகா பேகம், அனுபாரதி ஆகி யோர் முதல் பரிசையும், ஹரிஹரன், துளசிவர்மா, கமலி இரண்டாம் பரிசை யும், நந்தினி, அருண்குமார், சந்துரு ஆகியோர் 3ம் பரிசையும் பெற்றனர்.

விழா வில் புத்தா மார்சியல் ஆர்ட் ஸ் நிறுவனர் சேது கார்த்திகேயன், பேலஸ் சிட்டி செயலாளர் இதயதுல்லா, ஒருங்கிணைப் பாளர் நவநீதகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர்கள், ஆசிரியைகள் உமாதேவி, மகேஸ் வரி, கீதா, மாணவ, மாண விகள், பெற் றோர் உள்பட பலர் கலந்து கொண் டனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் லதா, சிவ ராணி, பேலஸ் சிட்டி ரோட் டரி சங்கத்தினர் செய்திருந்தனர். முன்ன தாக தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். ஆசிரியை அமிர்தகொடி நன்றி கூறினார்.