தினகரன் 08.02.2014
வீடு, மாடி தோட்டங்களுக்கு மாநகராட்சி பரிசு
சென்னை, : சென்னை மாநகராட்சி எல்லையில் வீட்டு தோட்டம், மொட்டை மாடியில், பால்கனியில் உற்பத்தியாகும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், தென்னை குலைகள் ஆகியவற்றின் கண்காட்சி வரும் 14, 15ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.
காய்கறி, பழங்கள், கீரைகள் மற்றும் தென்னங் குலைகள் ஆகியவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு வழங்கப்படவுள்ளது. சென்னை மாநகரை, பசுமை மாநகராக உருவாக்க வீட்டுத் தோட்டம் வைத்திருப்போருக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விலையில்லா தென்னங்கன்று வழங்கப்பட உள்ளது.
இதில் பங்குபெற விருப் பம் உள்ளோர் வரும் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.