ஆற்காடு நகராட்சி ஆணையராக பணியாற்றி ஆரணி
நகராட்சிக்கு பணி மாறுதலாகிச் செல்லும் செ.பாரிஜாதத்துக்கு பிரிவு உபசார
விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ஆர்.புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் கீதாசுந்தர் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ
வி.கே.ஆர்.சீனிவாசன் பாராட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள்,அலுவலக பணியாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.