Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எடப்பாடி நகர்மன்ற ஆணையர் பொறுப்பேற்பு

Print PDF

தினமணி             13.02.2014

எடப்பாடி நகர்மன்ற ஆணையர் பொறுப்பேற்பு

எடப்பாடி நகர்மன்றத்துக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட ஜி.தனலட்சுமி  புதன்கிழமை பொறுப்பேற்றார்.

 எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 2008- 2009-ஆம் ஆண்டு ஆணையராக இருந்தவர் ஏ.அருணாசலம். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பணிமாறுதலாகிச் சென்றார். அதற்குபிறகு, எடப்பாடி நகர்மன்றத்துக்கு ஆணையர் நியமிக்கப்படவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக நகராட்சிக்கு என தனியாக ஆணையர் நியமிக்கப்படாமல் பொறியாளர்களே கூடுதல் பொறுப்பு வகித்து வந்தனர். தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமங்கலம் நகர்மன்ற ஆணையராக பணியாற்றி வந்த ஜி.தனலட்சுமி எடப்பாடி நகர்மன்ற ஆணையராக நியமனம் செய்யப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றார். .

இதுகுறித்து தனலட்சுமி கூறியது:  எடப்பாடியை சுற்றிப்பார்க்கும் போது குப்பைகள்தான் அதிக அளவில் காணப்படுகிறது. அவற்றை சீர்படுத்துவதில்தான் என்னுடைய முதல்கவனம் இருக்கும் என்றார் அவர்.