Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் மேலும் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம்

Print PDF

மாலை மலர்              18.02.2014

சென்னையில் மேலும் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம்
 
சென்னையில் மேலும் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம்

சென்னை, பிப்.18 - சென்னையில் உள்ள 7 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம் திறந்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க வேண்டும் என்பது முதல்– அமைச்சரின் விருப்பமாகும்.

அதையொட்டி சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டு செயல்படுகிறது.

ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, எழும்பூர் அரசு தாய்–சேய் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, சேப்பாக்கம் சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்–சேய் நல மருத்துவமனை ஆகிய 6 ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகம் திறப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

இந்த பணிகள் எல்லாம் தற்போது நிறைவடைந்து விட்டன.

இந்த உணவகங்களை வருகிற 21–ந்தேதி முதல்– அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.

ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா உணவகம் திறப்பதால் நோயாளிகள், பார்வையாளர்கள் அதிக அளவில் பயன் அடைவார்கள்.

6 அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் புதிதாக தொடங்கப்பட உள்ள அம்மா உணவகத்தில் 3 வேளையும் சாப்பிடக்கூடிய வகையில் உணவு வழங்கப்படுகிறது.

இதற்காக நவீன சமையல் அறை, சாப்பிட வசதியான சில்வர் தட்டுகள், டேபிள் போன்றவை போடப்பட்டுள்ளது.