தினமணி 2.11.2009
பழனி நகராட்சியில் உள்ளாட்சி தின விழா
பழனி, நவ. 1: பழனியில் நகராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தினவிழா கொண்டாடப்பட்டது.
பழனி நகராட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சிகள் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் காளிமுத்து வரவேற்றார். அன்பழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் ஹக்கீம் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவை முன்னிட்டு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. நகராட்சி ராஜகோபால் பூங்காவில் மரம் நடும் விழா நடைபெற்றது.
அடிவாரம் சன்னதி வீதியில் இருந்து பஸ் நிலையம் வரை சுகாதாரப் பணியாளர்களின் மாஸ் கிளீனிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலையில் நகராட்சி அலுவலகம் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. சுற்றுப்புற சுகாதாரம், பெண் சிசுக் கொலை குறித்த பதாகைகளை மகளிர் ஏந்திச் சென்றனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சின்னச்சாமி பரிசுகளை வழங்கினார்.
நகராட்சி மேலாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.