Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காரைக்குடியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

காரைக்குடியில் உள்ளாட்சி தின விழா

காரைக்குடி, நவ. 1: காரைக்குடி நகராட்சி சார்பில், உள்ளாட்சி தினவிழா ராமநாதன் செட்டியார் நகர்மன்ற நடுநிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், நகர்மன்றத் தலைவர் எஸ். முத்துத்துரை தலைமை வகித்து, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்துப் பேசினார்.

சேதுராஜன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர் என். முருகன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ. ஷேக்காதர் பாட்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, நகராட்சி உதவிப் பொறியாளர் எம். வேலுச்சாமி வரவேற்றார். துப்புரவு ஆய்வாளர் ரமேஷ் நன்றி கூறினார்.