Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மம்சாபுரம் பேரூராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

மம்சாபுரம் பேரூராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், நவ.1: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் பேரூராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் ரா.கண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ஆ.காமராஜ் வரவேற்றார்.

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேரூராட்சி தலைவர் ரா.கண்ணன் உரையாற்றினார்.

விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா, ஆசிரியர்கள் பாத்திமா ஞானம், விஜயகுமார், சண்முகநாதன், ரெங்கலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவையொட்டி, பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு, கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் மாணவ, மாணவியரின் பல்வேறு சுகாதார விழிப்புணர்வு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சுகாதார மேற்பார்வையாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.