தினமணி 2.11.2009
உள்ளாட்சி தினவிழா பேரணி
வேலூர், நவ. 1: வேலூர் மாநகராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மாநகராட்சியின் முன் துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் செ. ராஜேந்திரன் தொடங்கி வைத்தார் (படம்).
இதில் எம்எல்ஏ சி. ஞானசேகரன், மேயர் ப. கார்த்திகேயன், துணை மேயர் தி.அ. முகமது சாதிக், இந்திய உணவுக் கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் தி.அ. முகமது சகி, பொறியாளர் தேவகுமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மாநகராட்சி வளாகத்தை அடைந்தது. அங்கு நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மேயர் ப. கார்த்திகேயன் பேசினார்.
இன்னிசை நிகழ்ச்சியும், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.