தினமணி 2.11.2009
கரூர் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா
கரூர், நவ.1: கரூர் நகராட்சியில் உள்ளாட்சி தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
கரூர் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நகர்மன்றத்தலைவர் ப. சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி. கனகராஜ், முன்னாள் நகராட்சி ஆணையர் ஆர். ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக மாவட்டச் செயலர் வாசுகிமுருகேசன் சிறப்பாளராகப் பங்கேற்று நகராட்சிக்கு புதிதாக வாங்கப்பட்ட குடிநீர் கசிவை சீர்செய்யும் வாகனத்தைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, 258 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 2.58 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. உள்ளாட்சி தின விழாவில் நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டி, கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவை முன்னிட்டு நகராட்சி சார்பில் நடைபெற்ற பணிகள் குறித்த விளக்கம் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
கவுன்சிலர்கள் ஆண்டாள் ஜி. பாலகுரு, இரா. பிரபு, வே. கதிரவன், ராஜலிங்கம், கமலா, ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.