தினமணி 2.11.2009
பெரம்பலூர் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா
பெரம்பலூர், நவ. 1: பெரம்பலூர் நகராட்சி சார்பில், உள்ளாட்சி தின விழாவையொட்டி சாலைகளைச் சுத்தப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, பெரம்பலூர் பழைய, புதிய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, காந்திசிலை, பெரியார்சிலை உள்ளிட்ட நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சிப் பணியாளர்கள் மூலம் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டன.
மேலும், சாலையோரக் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருள்கள் அகற்றப்பட்டன. நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா, துணைத் தலைவர் கி. முகுந்தன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சிவக்குமார், கண்ணகி, ஈஸ்வரி, பொற்கொடி ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.