தினமணி 3.11.2009
நகராட்சிக் குழு உறுப்பினர் தேர்தல்
ராஜபாளையம், நவ.2: ராஜபாளையம் நகராட்சியில் புதிய நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழு உறுப்பினர்கள் தேர்தல் திங்கள்கிழமை நகர்மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தேர்தல் அதிகாரியாக நகராட்சி ஆணையாளர் சித்திக் செயல்பட்டார்.
முதலில் நியமனக் குழு உறுப்பினர்க்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் துணைத் தலைவர் சுப்பராஜா 29 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
நகர்மன்ற வரிவிதிப்புக் குழு, மேல்முறையீட்டுக் குழுவில் 4 உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வைகுண்டராமு, மாரியப்பன், தி.மு.க. கவுன்சிலர்கள் ஆர்.எஸ்.மோகன், நயினார்முகமது ஆகியோர் 29 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றனர்.
ஒப்பந்தக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக கவுன்சிலர் சுபா 30 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
வெற்றிபெற்ற குழு உறுப்பினர்களை தலைவர் மகாலட்சுமி, துணைத் தலைவர் சுப்பராஜா ஆகியோர் பாராட்டினர். ஆணையாளர் சித்திக் சான்றிதழ்களை வழங்கினார்.