தினமணி 3.11.2009
கொடைக்கானலில் உள்ளாட்சி தின விழா
கொடைக்கானல், நவ. 2: கொடைக்கானல் நகர்மன்றம் சார்பில், உள்ளாட்சி தின விழா நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார்.
விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர்மன்றத் தலைவர் பரிசுகளை வழங்கிப் பேசினார்.
விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் செல்லத்துரை, உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் ராஜாராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார். முன்னதாக மூஞ்சிக்கல் பஸ் நிலையத்திலிருந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர்வலமாக வந்தனர்.