Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உள்ளாட்சி தின விளையாட்டுப் போட்டிகள்

Print PDF

தினமணி 3.11.2009

உள்ளாட்சி தின விளையாட்டுப் போட்டிகள்

பெரம்பலூர், நவ. 2: பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பெரம்பலூர் நகராட்சி சார்பில், உள்ளாட்சி தினத்தையொட்டி நகராட்சிப் பணியாளர்கள், அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் எம்.என். ராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் கி. முகுந்தன் முன்னிலை வகித்தார்.

இதில் தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 100 மீ. ஓட்டப் பந்தயம், லக்கி கார்னர் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

நகராட்சிப் பணியாளர்கள், அலுவலர்கள், நகராட்சி உறுப்பினர்களுக்கு தனித் தனியே போட்டிகள் நடைபெற்றது. இதில் நகராட்சி உறுப்பினர்கள் ஜே.எஸ். கருணாநிதி, கே.ஜி. மாரிக்கண்ணன், ரஹமத்துல்லா, அப்துல் பாரூக், அன்புதுரை, ரமேஷ்பாண்டியன், சரவணன், ஈஸ்வரி, ஜெயக்குமார் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 03 November 2009 07:20