தினமணி 3.11.2009
அரியலூர் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா
அரியலூர், நவ. 2: அரியலூர் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, நகராட்சி அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டு, சுவற்றில் வர்ணங்கள் பூசப்பட்டன.
மேலும், நகராட்சி அலுவலகம் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டது.
விழாவில் நகர் மன்றத் தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக அதிகாரி த. சமயசந்திரன், துணைத் தலைவர் வி. சுப்பிரமணியன்,நகர் மன்றஉறுப்பினர்கள் ஏ.பி.எஸ்.பழனிச்சாமி,நகராட்சி மேற்பார்வையாளர் ஆர். பாண்டு, சுகாதார ஆய்வாளர் எஸ். ரவீந்தரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்