தினமணி 3.11.2009
வாணியம்பாடியில் உள்ளாட்சி தின விழா
வேலூர்,நவ.2:வாணியம்பாடி நகராட்சியின் சார்பில் உள்ளாட்சி தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நகர்மன்றத் தலைவர் வி.சிவாஜி கணேசன் தலைமை வகித்தார். ஆணையர் ராஜேந்திரன், துணைத் தலைவர் பாரூக் முன்னிலை வகித்தனர். இவ் விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், மகப்பேறு நிதியுதவித் திட்டம் கீழ், 145 பேருக்கு தலா ரூ.3 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
நகர்மன்ற உறுப்பினர்கள் தென்னரசு, ஷாயித் ஜப்பார், அப்துல்லா, ரிஸ்வானா, சங்கர், ராணி, ராஜா, அலுவலர்கள் முரளி, திமுக இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.