தினமணி 4.11.2009
உள்ளாட்சி தின விழிப்புணர்வுப் பேரணி
பட்டுக்கோட்டை, நவ. 3: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் உள்ளாட்சி தின விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. பேரணியை, நகர்மன்றத் தலைவர் இ. பிரியா கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
நகர்மன்ற துணைத் தலைவர் செ. கண்ணன் தலைமை வகித்தார். பேரணியில், மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்டி. சுவாமிநாதன், மேலாளர் ராமமூர்த்தி, கணக்கர் ஷேக் நசுருதீன், நகரமைப்பு அலுவலர் கருப்பையன், உதவிப் பொறியாளர் கே. குமார், சுகாதார அலுவலர் (பொறுப்பு) என். ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் வை. நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.