தினமணி 5.11.2009
நகராட்சிப் பள்ளியில் உள்ளாட்சி தின போட்டி
சிவகங்கை, நவ.4: சிவகங்கை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டது. நகராட்சி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார் பள்ளி கல்விக்குழு தலைவரும் நகர்மன்ற உறுப்பினமான சரவணன் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை மரியசெல்வி வரவேற்றார்.
உள்ளாட்சி தினத்தில் மாணவர்களுக்குப் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நகராட்சி ஆணையர் சுந்தரமூர்த்தி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் நடராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
விழாவில் ஆசிரியப் பயிற்றுநர் ராதாகெüரி, ஆசிரியர்கள் சுந்தரி, சபரிநாதசிவா, கற்பகம் மற்றும் பெற்றோர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.