தினமணி 6.11.2009
திருப்பத்தூரில் உள்ளாட்சிகள் தின விழா
திருப்பத்தூர், நவ.5: திருப்பத்தூரில் உள்ளாட்சிகள் தின விழா நடைபெற்றது. விழாவில முதல் நிகழ்ச்சியாக முழு சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்,
பேரூராட்சி மன்றத்தலைவர் என்,எம்.சாக்ளா பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக நடைபெற்ற பேரணியில் துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆர்.சி.பாத்திமா பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பேரூராட்சி உரப் பூங்காவில் மரம் நடுவிழா நடைபெற்றது. பின்னர் ஆர்.சி. பாத்திமா பள்ளியில் மாணவ, மாணவியருக்கு அண்ணா பற்றிய கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன உள்ளாட்சி தின விழாவையொட்டி நகர் முழுவதும்சிறப்பு துப்புரவு முகாமும் நடைபெற்றது.