Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவுப் பணியாளர்களுக்கான கோலப்போட்டி

Print PDF

தினமணி 09.11.2009

துப்புரவுப் பணியாளர்களுக்கான கோலப்போட்டி

திருப்பத்தூர், நவ.8: திருப்பத்தூரில் உள்ளாட்சி தின விழாவையொட்டி கோலப்போட்டி நடைபெற்றது.

சனிக்கிழமை நடைபெற்ற கோலப் போட்டியில், திருப்பத்தூர் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பெண் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நடுவராக, தலைமை எழுத்தர் சாந்தி, பரிசுக்கான கோலங்களைத் தேர்வு செய்தார். பதினைந்து பெண்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் ராணி முதல் பரிசையும், காளீஸ்வரி இரண்டாம் பரிசையும், நாச்சம்மை மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்குத் திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா பாராட்டு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.

Last Updated on Monday, 09 November 2009 09:29