Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போடியில் பிடிபட்ட கால்நடைகள்

Print PDF

தினமணி 23.11.2009

போடியில் பிடிபட்ட கால்நடைகள்

போடி, நவ. 22: புதிய நகராட்சி ஆணையரின் தொடர் நடவடிக்கையால், போடி நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரிந்த 30 மாடுகள் பிடிக்கப்பட்டு, நகராட்சி இடத்தில் அடைக்கப்பட்டன. போடி நகராட்சியில் ஆக்கிரமிப்பு மற்றும் மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் தொல்லையால் போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், போடி நகராட்சியில் புதிதாக பொறுப்பேற்ற ஆணையர், போடி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிóனார். மேலும், நகரில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட மாடுகளில் 30 மாடுகள் பிடித்து அடைத்து வைக்கப்பட்டன. பிடிபட்ட இந்த மாடுகளை, தொண்டு நிறுவனங்களிடமோ அல்லது விரும்பும் அமைப்புகளிடமோ ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து, போடி பகுதியில் சுற்றித்திரியும் நாய், கழுதை, பன்றிகளையும் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Monday, 23 November 2009 06:41