தினமணி 23.11.2009
கருங்கல் சிறுவர் பூங்காவில் கொட்டும் மழையில் தூய்மைப் பணி
கருங்கல், நவ. 22: கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட திருஞானபுரம் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் கொட்டும் மழையில் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருஞானபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாடுவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2 லட்சத்தில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டது. இப் பூங்காவை ஆரம்பம் முதலே பேரூராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்காததால் உள் பகுதியில் புல், புதர்கள் காணப்பட்டு சிறுவர்களுக்கு பயனற்ற நிலையில் இருந்தது.
இந்நிலையில், பூங்காவின் உள் பகுதியில் சிலர் மது அருந்துவதும் நடைபெற்றது. இவர்கள் வீசியெறிந்த பிளாஸ்டிக் பொருள் மற்றும் மது பாட்டில்களால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தி கடந்த 13- ம் தேதி வெள்ளிக்கிழமை தினமணியில் படத்துடன் வெளியானது.
இதையடுத்து, கருங்கல் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயசந்திரன் (பொறுப்பு) உத்தரவின் பேரில் இரண்டு பேரூராட்சி பணியாளர்கள் வெள்ளிக்கிழமை கொட்டும் மழையில் பூங்காவில் தூய்மைப் பணி மேற்கொண்டனர்