தினமணி 24.11.2009
பல்லடம் நகராட்சியில் வார்டுக்கு 10 புதிய தெரு விளக்குகள்
பல்லடம் நவ 23: பல்லடம் நகராட்சி பகுதியில் வார்டுக்கு 10 புதிய தெரு விளக்குகள் அமைக்கப்படும் என்றும் அதற்குரிய இடத்தை வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்வார்கள் என்று நகராட்சி தலைவர் ஆர்.ராமமூர்த்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.
திட்டப்பணிகள் குறித்து அவர் மேலும் கூறியது: பல்லடம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் இப்போதைக்கு இல்லை. காற்றாலை திட்டம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்துயுள்ளோம். புதிய குடிநீர் இணைப்பு ஒன்றுக்கு ரூ.7ஆயிரம் டெபாசிட் தொகை பெற்றும், ரூ.2 கோடி கடன் பெற்றும் அத்திகடவு இரண்டாவது திட்டத்தை நிறைவேற்ற அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் நாங்கள் ரூ.5 ஆயிரம் மக்களிடம் டெபாசிட் வசூலித்து தருகிறோம் மீதியை அரசு மானியமாக வழங்க வேண்டும் என்கிறோம் ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. என்றார்