Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உத்தரமேரூர் பேரூராட்சியில் உழவர் சந்தை ஏற்படுத்த தீர்மானம்

Print PDF

தினமணி 01.12.2009

உத்தரமேரூர் பேரூராட்சியில் உழவர் சந்தை ஏற்படுத்த தீர்மானம்

காஞ்சிபுரம்,நவ.29: உத்தரமேரூர் பேரூராட்சியில் உழவர் சந்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புக்குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி.மீனாட்சிசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசினார்.

உத்தரமேரூர் வட்டத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டியுள்ள மக்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். உத்தரமேரூர் பேரூராட்சியில் உழலர் சந்தை ஏற்படுத்த வேண்டும். படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை, கூட்டுறவுத்துறை மூலமாக திறக்கப்பட வேண்டும். அனுமதியின்றி செயல்படும் கல்குவாரி, கிரஷர்களை மூட வேண்டுóம். பாலாறு மற்றும் செய்யாற்றில் தடுப்பு அணை கட்ட வேண்டும். உத்தரமேரூரில் பஸ் பணிமனையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியன் தேர்வுக்குழு கூட்டத்தில் உத்தரமேரூர் வட்ட அமைப்பாளராக சி.பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டார். அமைப்பு குழு உறுப்பினர்களாக வி,மன்னார் கிருஷ்ணன், வை.ஆனந்தகுமார், பி.தர்மராஜ், பி.ஜெயந்தி, எஸ்.பெருமாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.மோகணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எ.வி.சிவக்குமார், மதுராந்தகம் வட்டச் செயலாளர் எ.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.