Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டம் தரமான மின் வயர்களை பயன்படுத்த கவுன்சிலர்கள் கோரிக்கை

Print PDF

தினமணி 01.12.2009

காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டம் தரமான மின் வயர்களை பயன்படுத்த கவுன்சிலர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம், நவ. 30: காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தரமான மின் ஒயர்களை பயன்படுத்த வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

காஞ்சிபுரம் நகர்மன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் வி.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

இக் கூட்டத்தில் நகரப்பகுதிகளில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை என

உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். பறவைகள் மற்றும் குரங்குகளால் மின் ஒயர்கள் அறுபடுகின்றன. எனவே தரமான மின் ஒயர்களை பயன்படுத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக நகர்மன்றத் தலைவர் உறுதியளித்தார். கூட்டத்தில் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகாலட்சுமி தேவி, நகராட்சி பொறியாளர் கருப்பையா, நகர்நல அலுவலர் பரணிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 01 December 2009 07:57