தினமணி 04.12.2009
ஆரணி நகராட்சித் திட்டப் பணிகள்: வேலூர் மண்டல அலுவலர் ஆய்வு
ஆரணி, டிச.3: ஆரணி நகராட்சியில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகளை வேலூர் மண்டல அலுவலர் சுப்பிரமணி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
எரிவாயு தகன மேடை, இறைச்சிக் கூடம், திருவள்ளுவர் நகரில் உள்ள தாய்சேய் நல டுதி ஆகியவற்றின் பணிகளை சுப்பிரமணி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:
எரிவாயு தகன மேடை பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படும். பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் நவீன கழிவறைகள், இலவச சிறுநீர்
கழிப்பிடம் சீரமைக்கும் பணி ஆகியவற்றுக்கான வரைபடங்கள் தயார் செய்து பணி ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது. இடைத்தேர்தல் முடிந்ததும் இப்பணிகள் ஆரம்பிóக்கப்படும் என்றார்.
நகராட்சி மேலாளர் ராமசாமி, வருவாய் அலுவலர் கீதா, உதவிப்பொறியாளர் சம்பத், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.