தினமணி 08.12.2009
போக்குவரத்துக்கு இடையூறு: மாடுகள் பிடிக்கப்பட்டன
திருநெல்வேலி, டிச. 7: திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரிந்த சுமார் 18 மாடுகள் திங்கள்கிழமை பிடிக்கப்பட்டன.
மாநகர்ப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிந்தன. மேலும் சில இடங்களில் சாலையில் கூட்டமாக மாடுகள் படுத்து கிடந்ததால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. இது குறித்து பொதுநல அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடமும், மாநகர காவல் துறையிடமும் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், மாநகர போக்குவரத்து பிரிவு போலீஸôர் திங்கள்கிழமை மாலை சந்திப்பு, நகரம், பாளையங்கோட்டை பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து தச்சநல்லூர் வார்டு அலுவலகத்தில் அடைத்தனர். இதில் மொத்தம் சுமார் 18 மாடுகள் பிடிக்கப்பட்டன.