தினமணி 10.12.2009
திருச்செங்கோடு நகராட்சியில் சிறப்பு முகாம்
திருச்செங்கோடு, டிச. 9: திருச்செங்கோடு நகராட்சியில் 15-ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.
நகராட்சிப் பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், பெயர் திருத்தம் செய்தல், பிறப்பு சான்றிதழ்களில் பெயர் சேர்த்தல் ஆகிய பணிகளை செய்து கொள்ளலாம். சிறப்பு முகாமின்போது நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும் நிலுவையின்றி செலுத்தி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அன்றே சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நகர் மன்றத் தலைவர் நடேசன், ஆணையர் இளங்கோ ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.