தினமணி 16.12.2009
நெல்லை மாநகராட்சியில் மகப்பேறு நிதியுதவி அளிப்பு
திருநெல்வேலி, டிச. 15: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் 925 பேருக்கு நிதியுதவி வழங்கும் பணியை மேயர் அ.லெ. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
இவர்களுக்கு தலா ரூ. 6,000 வீதம் வழங்கப்படும். முதலாவது 5 பேருக்கு இந்த நிதியுதவியை மேயர் வழங்கி னார். ஆணையர் கா. பாஸ்கரன், திருநெல்வேலி மண்டலத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்ட னர். மேலும், நடமாடும் குடிநீர்க் கசிவு நீக்கும் மற்றும் பழுது நீக்கும் வாகனத்தையும் மேயர் தொடக்கிவைத்தார்.
ரூ. 15 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனம் மூலம் நீரேற்று நிலையம், பிரதான குழாய் களில் உள்ள நீர்க்கசிவை நவீன கருவி மூலம் கண்டறிந்து உடனுக்குடன் பழுதுநீக்க முடியும். குடிநீர் குளோரின் அளவை ஆய்வு செய்யலாம். குடிநீர் தொடர்பான புகார்களை உடனுக்குடன் சரி செய்ய முடியும். கழிவுநீரை அகற்றவும் பயன்படுத்தலாம்.