தினமணி 21.12.2009
திருச்செங்கோடு நகராட்சி சிறப்பு முகாம்
திருச்செங்கோடு, டிச.20: திருச்செங்கோடு நகராட்சி சார்பில் நடந்த சிறப்பு முகாமில் ஒரே நாளில் 106 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்த முகாமிற்கு ஆணையர் இளங்கோவன் தலைமை வகித்தார். சொத்துவரி மற்றும் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் சமபந்தமாகவும் பிறப்பு இறப்பு பதிவது சமபந்தமாகவும் வந்த மனுக்கள் உடனே ஆய்வு செய்யபபட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. துப்புரவு அலுவலர் முருகேசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்