தினமணி 23.12.2009
ராசிபுரம் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் முகாம்
ராசிபுரம், டிச.22 : ராசிபுரம் நகராட்சியில் பிறப்பு இறப்பு சான்றிதழ் மற்றும் சொத்து வரி, வீட்டு வரி பெயர் மாற்றும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
÷ முகாமில் பிறப்பு இறப்பு சான்றிதழ், சொத்து வரி, வீட்டு வரி மாற்றம் கேட்டு ஏராளமான பொதுமக்கள் அளித்த விண்ணப்பத்தின் மீது பரிசீலனை செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமில் ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் கு.தனலட்சுமி தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
நகராட்சிப் பொறியாளர் எஸ்.இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரேசன் உள்ளிóட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதுபோன்ற சான்றிதழ்களுக்கு பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலையில், ஒரே நாளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது பயனுள்ளதாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதுபோன்ற முகாம்கள் பிற துறைகளிலும் நடத்தப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறினர்.