Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சொந்த மனைப்பட்டா இருந்தால் ரூ.1.60 லட்சம் வரை கடனுதவி ஆட்சியர் தகவல்

Print PDF

தினகரன் 23.12.2009

சொந்த மனைப்பட்டா இருந்தால் ரூ.1.60 லட்சம் வரை கடனுதவி ஆட்சியர் தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளுக்குட்பட்ட குறைந்த வருவாய் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவினருக்கு உதவிடும் பொருட்டு தங்களது பெயரில் சொந்த மாக மனைப்பட்டா உள்ள அனைவருக்கும் வட்டி மானியத்தில் வீடு கட்டுவதற்கு வங்கி கடனுதவி பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள வீட்டுவசதி வாரியத்தை முகவராக நியமனம் செய்துள்ளது.

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மாத வருமானம் ரூ.3,300 வரை உள்ளவர்களுக்கு மானிய வட்டியில் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை கடன், மாத வருமானம் ரூ.3,301 முதல் ரூ.7,300 வரை உள்ளவர்களுக்கு மானிய வட்டியில் ரூ.1,60,000 வரை மானிய வட்டியில் கடன் வழங்கப்படும்.

ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட கடன் தொகைக்கு நிர்ணயிக்கும் வட்டியை செலுத்த வேண்டும். எனவே விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சி பகுதியை சேர்ந்தவர்களும் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சி பகுதிகளை சேர்ந்தவர்களும் மேற்குறிப்பிட்டுள்ள மாத வருமானத்திற்குள் இருந்து சொந்தமாக மனைப்பட்டா இருந்தால் உடனடியாக விண்ணப்பித்து ரூ.1,60000 வரை வங்கிக்கடன் பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.