Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவு ஊழியர்களுக்கு சீருடை

Print PDF

தினகரன் 26.12.2009

துப்புரவு ஊழியர்களுக்கு சீருடை

பள்ளிப்பட்டு : பொதட்டூர்பேட்டை பேரூராட்சிமன்ற கூட்டம் மன்ற கூடத்தில் நடந்தது. பேரூராட்சி தலைவர் ஏ.வி.நேதாஜி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஏ.எம்.பழனி, பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் நடந்தபோது காஞ்சி தெருவை சேர்ந்த பகுதி மக்கள் சிலர், ‘எங்கள் பகுதியில் சரியாக குடிநீர் வரவில்லை. சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி தலைவர் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். கவுன்சிலர்கள் கிருஷ்ணன், தவமணி, பழனி, கற்பகம், ராஜேந்திரன், கருணா, பாலம்மாள், விஜயா, ஜோதி, ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு ஊழியர்களுக்கு, பேரூராட்சி தலைவர் நேதாஜி சீருடை வழங்கினார்.