தினமணி 31.12.2009
பிறப்பு, இறப்பு பதிவு குறித்த சிறப்பு முகாம்
தருமபுரி டிச. 29: தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு குறித்த சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரிகள் தொடர்பான பெயர் மாற்றம் கோரி 300-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். தகுதியானவர்களுக்கு முகாமிலேயே, சான்றிதழ்களை நகர்மன்றத் தலைவர் டி.சி.பி.ஆனந்தகுமார்ராஜா வழங்கினார் (படம்).
ஆணையர் அண்ணாதுரை, பொறியாளர் மோகன், மேலாளர் சுந்தரேசன், நகர்மன்ற உறுப்பினர்கள மாது, வேணுகோபால், சந்திரமோகன், பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.