தினமலர் 31.12.2009
திண்டுக்கல்லில் மேலும் உழவர்சந்தை அமைக்க ஏற்பாடு
திண்டுக்கல் : திண்டுக்கல் நகராட்சி பகுதியில் மேலும் ஒரு உழவர்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திண்டுக்கல் உழவர் சந்தை துவங்கி 10 ஆண்டு நிறைவு விழா நடந்தது.கலெக்டர் வள்ளலார்,காந்திகிராம சர்வோதய சித்த மூலிகை மருத் துவ பொருட்கள் விற் பனையை துவக்கி வைத்து பேசியதாவது:
உழவர் சந்தையில் விவசாயிகளே விற்பனை செய் வதால், பொதுமக்கள் லாபம் அடைகின்றனர். திண்டுக்கல்லில் மலைக் காய்கறி, மருத்துவ மூலி கை பொருட்கள் கிடைக்கிறது. பருப்பு, கைக்குத்தல் அரிசி, அனைத்து பலசரக்கு பொருட்கள், கிராமப் புற உணவுகளான கம்பங் கூழ், கேப்பைகஞ்சி, புட்டு, பயிறு வகைகள், காய்கறி சூப் ஆகியவை விற்பனை செய்யப்படும். இங்குள்ள விவசாயிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் எலக்ட்ரானிக் தராசு விரைவில் பயன்படுத்தப்படும். திண்டுக்கல் நகரில் மேலும் ஒரு உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். மேலும் உழவர் சந்தை அருகில் சிறுவர் நூலகம், மகளிர் பிரிவு நூலகமும் துவக்கி வைக் கப்பட்டது. சந்தை அலுவலர் நாகேந்திரன், விற்பனைக்குழு தலைவர் மணிமுருகன், நகராட்சி தலைவர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.