Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி உள்கட்டமைப்பு வளர்ச்சிப்பணிக்கு கவுன்சில் ஒப்புதல்

Print PDF

தினமலர் 04.01.2010

மாநகராட்சி உள்கட்டமைப்பு வளர்ச்சிப்பணிக்கு கவுன்சில் ஒப்புதல்

திருச்சி: திருச்சி மாநகராட்சியின் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பு நிதி 2009-10ன் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, மாநகராட்சி கவுன்சில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பு நிதியாக 4.75 கோடி ரூபாய் மற்றும் 2.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய நகராட்சி நிர்வாகத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

அதனடிப்படையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள திருச்சி மாநகராட்சி திட்டமிட்டு, அதற்கான மதிப்பீடுகளையும் தயாரித்து மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது. திட்டமிடப்பட்ட பணிகள் மற்றும் மதிப்பீடு விபரம் வருமாறு:

மாநகராட்சி 8வது வார்டு பூசாரித்தெருவில் துப்புரவு பணியாளர்களுக்காக முறையே 12 குடியிருப்புகள் கொண்ட மூன்று கட்டிடங்கள் கட்டுதல் பணிகள்: தலா 66 லட்சம் ரூபாய். குடியிருப்புக் கட்டிடம் கட்டும் வளாகத்தில் சமுதாயக் கூடம் கட்டுதல் பணிகள்: 52 லட்சம் ரூபாய். .புதூர் கொல்லாங்குளம் வாய்க்கால் கரையில் வெள்ள பாதுகாப்பு வசதி செய்து கொடுத்தல் பணி: 75 லட்சம் ரூபாய்.அம்மையப்பநகர் காத்தான் வாய்க்கால் கரையில் வெள்ள பாதுகாப்பு வசதி செய்து கொடுத்தல் பணி: 50 லட்சம் ரூபாய். தில்லைநகர் இரட்டை வாய்க்கால் கரையில் வெள்ள பாதுகாப்பு வசதி செய்து கொடுத்தல் பணி: 50 லட்சம் ரூபாய். அரியமங்கலம் ஜோதிநகர் மற்றும் சீனிவாசநகர் பகுதியில் வெள்ள பாதுகாப்பு வசதி செய்து கொடுத்தல் பணி: 50 லட்சம் ரூபாய். கீழரண் சாலையில் காந்தி மார்க்கெட், மீன் மார்க்கெட் அருகேவுள்ள காந்தி சிலையிலிருந்து மகாராணி தியேட்டர் சாலை வரை பாதசாரிகள் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் திரும்பக்கட்டுதல் பணி: 56 லட்சம் ரூபாய். நெல்சன் சாலையில் மழைநீர் வடிகால் திரும்பக் கட்டுதல் பணி: 25 லட்சம் ரூபாய். பிரதான சாலைகளில் அமைந்துள்ள புதைவடிகால் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்க இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனம் வாங்குதல் பணி: 35 லட்சம் ரூபாய். குறுகிய சந்துகளில் அமைந்துள்ள புதைவடிகால் குழாய்களில் ஏற்படும் அமைப்புகளை நீக்கி இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வாங்குதல் பணி: 20 லட்சம் ரூபாய். மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதுக்கு ஒப்புதல் அளித்து கடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.