தினமலர் 06.01.2010
நன்னிலம் பேரூராட்சிக்கூட்டம்
நன்னிலம் : நன்னிலம் பேரூராட்சிக் கூட்டம் தலைவர் சரஸ்வதி பாலு தலைமையில் நடந்தது.கூட்டத்தில் நவம்பர் 2009ம் மாதத்தில் நடந்த பிறப்பு, இறப்பு கணக்குகள் மற்றும் பேரூராட்சி வரவு, செலவு, சன்னாநல்லூர் வடக்கு ஆதிதிராவிட தெருவில் ஒருங்கிணைந்த தேசிய குடிசை மேம்பாடு திட்டத்தின் கீழ் 25 வீடுகளுக்கு மதிப்பீடு மற்றும் விபரப்பட்டியல் ஆகியவற்றை அங்கீகரிப்பது, பொது சுகாதார பிரிவில் பழுதடைந்துள்ள சைக்கிள் ரிக்ஷாக்களை சீரமைப்பது, பேரூராட்சி அலுவலக கட்டடம் பழுதடைந்துள்ளதால் புதிதாக அலுவலக கட்டடம் கட்ட மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி சென்னை பேரூராட்சி இயக்குனருக்கு கடிதம் அனுப்புவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.