Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துறைமங்கலத்தில் சமுதாய கூடம் திறப்பு

Print PDF

தினமலர் 06.01.2010

துறைமங்கலத்தில் சமுதாய கூடம் திறப்பு

பெரம்பலூர் : பெரம்பலூர் துறைமங்கலத்தில் ரூ. 12லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூட திறப்பு விழா நடந்தது.பெரம்பலூர் துறைமங்கலத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12லட்சம் மதிப்பில் புதிதாக சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு நகராட்சி தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணை தலைவர் முகுந்தன், ஆணையர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்எல்ஏ ராஜ்குமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசுகையில், இந்த சமுதாய கூடத்திற்கு மேல் மாடி கட்டவும், சமையலறை கட்டவும் வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கப்படும் என்றார். விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள் கண்ணகி, மாரிக்கண்ணன், அப்துல்பாரூக், சரவணன், ஜெய்குமார், ரகமத்துல்லா, திமுக மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், ஆசிரியர் ஆனந்தராஜ் ஆகியோர் பேசினர். முன்னதாக பெரம்பலூர் வடக்குமாதவி சாலையிலும், துறைமங்கலத்திலும் புதிதாக ரேஷன் கடைகளை எம்எல்ஏ ராஜ்குமார் திறந்து வைத்தார்.நிகழ்ச்சிகளில் மாவட்ட வழங்கல் அலுவலர் முகம்மது ஆரிப், கூட்டுறவு துணை பதிவாளர் ஜெயராமன், தனி அலுவலர் அரப்பலி, சார்பதிவாளர்கள் கோபால கிருஷ்ணன்,முருகன், விற்பனையாளர் ராகவன் மற்றும் திமுக பிரதிநிதிகள் அன்பு, குமார், சுந்தரராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.