Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நலவாரிய உறுப்பினர் சேர்க்கை: துப்புரவு பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்

Print PDF

தினமணி 06.01.2010

நலவாரிய உறுப்பினர் சேர்க்கை: துப்புரவு பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, ஜன.5: தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர துப்புரவு பணியாளர்கள் தாட்கோ அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட ஆட்சியர் ஆர்.சுடலைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூய்மைப் பணிபுரிவோர் அனைவரும் இதில் உறுப்பினராகலாம். சூரம்பட்டி மற்றும் பெரியசேமூர் நகராட்சிகளில் புதன்கிழமையும் (ஜன.6), ஈரோடு மாநகராட்சி மற்றும் பவானி நகராட்சியில் வரும் 8-ம் தேதியும், கோபி, சத்தி மற்றும் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிகளில் 9-ம் தேதியும் உறுப்பினர் சேர்க்கைக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

நகராட்சி அலுவலகங்களில் இதற்கான விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை 0424-225 9453 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Last Updated on Wednesday, 06 January 2010 10:08