தினமலர் 07.01.2010
பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்க கூட்டம்
அவிநாசி: திருப்பூர் மாவட்ட பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்தது.திருப்பூர் மாவட்ட பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் சங்க கூட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில், ஓய்வு பெற்றவருக்கு பாராட்டு விழா, புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.மாவட்ட தலைவராக இருந்த சதாசிவம் ஓய்வு பெற்றமைக்கு பாராட்டு விழா நடந்தது.ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜம்புநாதன் சிறப்புரையாற்றி, சதாசிவத்துக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.புதிய மாவட்ட தலைவராக சின்னப்பன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாவட்ட நிர்வாகிகள் மாரியப்பன், குணசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்ட பொருளாளர் சின்னப்பன், தணிக்கையாளர் குணசேகரன், ஈரோடு மாவட்ட தலைவர் ஆறுமுகம், செயலாளர் மலையமான் திருமுடிக்காரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.