தினமணி 07.01.2010
துப்புரவுப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1.50 லட்சம் நிதி
பெரம்பலூர், ஜன. 6: பணியின்போது இறந்த துப்புரவுப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலையை பெரம்பலூர் நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில், துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்தவர் அரணாரை கிராமத்தைச் சேர்ந்த கோ. பாலகிருஷ்ணன். இவர் கடந்த 18.7.2009-ம் தேதி இயற்கை மரணமடைந்தார். இவரது குடும்பத்தினருக்கு, ஆயுள் காப்பீட்டுத் தொகை ரூ.1.50 லட்சத்துக்கான காசோலையை, அவரது மனைவி பாப்பாவிடம், நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா ழமை வழங்கினார்.
அப்போது, நகராட்சி உறுப்பினர்கள் கே. புவனேஷ்வரி, ஆர். ஈஸ்வரி, துப்புரவு ஆய்வாளர் எஸ். முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.