தினமலர் 08.01.2010
ஊனமுற்றோர் குறை தீர்க்க மாநகராட்சியில் சிறப்பு முகாம்
சென்னை : உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சியில் வரும் 9ம் தேதி (நாளை) சிறப்பு குறை கேட்பு முகாம் நடக்க உள்ளது.உடல் ஊனமுற்றவர் களுக்கு சிறந்த முறையில் உதவி புரிந்தமைக்காக, சென்னை மாநகராட்சிக்கு கடந்தாண்டு மத்திய அரசின் விருது கிடைத்தது. மேயர், கமிஷனர் ஆகியோர் டில்லிக்கு சென்று, விருதை பெற்று வந்தனர். இதனால், சென்னை மாநகராட்சி மறுபடியும் உடல் ஊனமுற்றவர்களுக்கு சிறப்பு குறை கேட்பு முகாமை, நாளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கும். ரிப்பன் கட்டடத் தில் நடக்கும் இந்த முகாமில், சமூகநலத் துறை, மாநகாட்சியின் அனைத்து பிரிவு அதிகாரிகள் கலந்து கொள்வர்.உடல் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர வண்டிகள், வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு உதவிகள் வழங் கப்படும். இந்த குறை கேட்பு முகாமில் ஊனமுற்றவர்களுக்கு சிறப்பு மருத் துவ முகாமும் நடத்தப்படும்.