Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூய்மை பணிபுரிவோர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

Print PDF

தினமணி 08.01.2010

தூய்மை பணிபுரிவோர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி, ஜன. 7: தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பணிபுரிவோர் நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி, இதர நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு தாட்கோ மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் துப்புரவு பணியாளர் நலவாரிய நிதியில் இருந்து வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவுப் பணியாளர்கள் அந்தந்த அலுவலகத்தில் உள்ள அலுவலரை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவ்வலுவலகத்திலேயே கொடுத்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

இதற்கான சிறப்பு முகாம் கடந்த 4-ம் தேதி முதல் அனைத்து அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. வரும் 9-ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.

Last Updated on Friday, 08 January 2010 10:24